×

தாராபுரம் காங்கிரஸ் சார்பில் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தாராபுரம், டிச. 12:   திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காந்தி சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.  குடியுரிமை திருத்த மசோதா மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தாராபுரம் காந்தி சிலை முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் அருண்குமார், நகர பொதுச் செயலாளர் அசோக்குமார், ஹக்கீம், கோபிநாத், சுரேஷ், தாராபுரம் வட்டார தலைவர் முத்துக்குமார், நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சூரிய நல்லூர் ராசு, மாநில மனித உரிமை கழக தலைவி செல்வராணி உள்பட 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Darapuram Congress ,
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு