ஜெயங்கொண்டம், டிச. 12: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது. கிரிவலத்தை திருப்பனந்தாள் காசிமடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் துவக்கி வைத்தார். கிரிவலத்தையொட்டி கணக்க விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கோயிலை சுற்றியுள்ள கிராமங்களான குருக்கள் தெரு கணக்கவிநாயகர் கோயில் வழியாக மீண்டும் கோயிலுக்கு வந்தனர்.