×

அரியலூர் அருகே சாலையை ஆக்கிரமித்த பாம்பால் பரபரப்பு

அரியலூர், டிச. 12: அரியலூர் நகரில் செந்துறை சாலையின் நடுவே பாம்பு ஒன்று தலையை தூக்கி கொண்டு படமெடுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் நகரில் செந்துறை சாலையின் நடுவே ஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த பாம்பு எங்கேயும் செல்லும் அங்கேயே தலையை தூக்கி கொண்டு நின்றது. இதனால் சாலையின் இருபுறமும் வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தினர். பின்னர் அந்த பாம்பை விரட்டி விட்டனர். ஆனால் அந்த பாம்பு செல்லாமல் அங்கேயே இருந்தது.

அப்போது அதை ஒருவர் கடந்து செல்ல முயன்றார். அப்போது அவரை பார்த்து மிரட்டும் தோணியில் பாம்பு பார்த்து படமெடுத்தது. பின்பு 10 நிமிடங்களுக்கு மேலாக பாம்பு அங்கேயே நின்றது. பின்னர் அந்த பாம்பு சாலை அருகே உள்ள புதருக்குள் சென்றது. பின்னர் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுடன் வாகன ஓட்டி சென்றனர். பாம்புவின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Bambal Parabhava ,road ,Ariyalur ,
× RELATED பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசியவர் கைது