மின்துறை உதவி பொறியாளர் அலுவலகம் 16ம் தேதி முதல் இடமாற்றம்

திண்டிவனம், டிச. 12: திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் இயங்கி வந்த, உதவி பொறியாளர் அலுவலகம் வரும் 16ம் தேதி முதல் துணை மின் நிலைய வளாகத்தில் இயங்கும் என மின்துறை அறிவித்துள்ளது.இது குறித்து திண்டிவனம் மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழ்நாடு மின்வாரியத்திற்குட்பட்ட திண்டிவனம் நகரம்-1 பிரிவின் உதவி பொறியாளர் அலுவலகம் எண்.3, கோவிந்தசாமி தெரு, காவேரிப்பாக்கம் என்ற முகவரியில் இயங்கி வந்தது.நிர்வாக காரணங்களுக்காக வரும் 16ம் தேதி முதல், இந்த அலுவலகம் திண்டிவனம் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.மேலும், மின் நுகர்வோர்கள் அனைவரும் மின்சாரம் தொடர்பான தேவைகளுக்கும், திண்டிவனம் துணை மின் நிலைய வளாகத்தில் செயல்பட உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: