×

முதியவர் மாயம்

ரிஷிவந்தியம், டிச. 12:  ரிஷிவந்தியம் அருகே மண்டகபாடி கிராமத்தை சேர்ந்தவர்  மாரிமுத்து (65). விவசாய கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் மனநிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மாரிமுத்து காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து அவரது மகன் நாராயணன் ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு