×

செவிலியரிடம் 3 பவுன் தாலி செயின் பறிப்பு

விக்கிரவாண்டி, டிச. 12: மயிலம் அருகே பட்டப்பகலில் செவிலியரிடம் 3 பவுன் தாலி செயினை மர்ம நபர் பறித்து சென்று விட்டார். மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு மயிலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மனைவி பவுர்ணமி (50). ஆலகிராமம் பகுதியில் கிராம செவிலியராக உள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆலகிராமம் பகுதியில் பணியை முடித்துவிட்டு முப்புளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு தனது  கணவருடன் மொபட்டில் வீட்டிற்கு வந்தார். கொடிமா ஏரிக்கரை பகுதியில் வந்தபோது பின்னால் அதே திசையில் பைக்கில் ஹெல்ெமட் அணிந்து வந்த மர்ம வாலிபர் பவுர்ணமி கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயின், மற்றும் 1/4 பவுன் சிலுவையுடன் கூடிய தங்க செயினை அறுத்து கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றுவிட்டார். இது தொடர்பாக மயிலம் போலீசில் தட்சிணாமூர்த்தி புகார் கொடுத்தார். போலீசார் தாலி செயினை பறித்த மர்ம வாலிபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் செவிலியரிடம் தாலி செயினை அறுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : nurse ,Dali St. ,
× RELATED சைரன் விமர்சனம்