×

புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

கடலூர், டிச. 12:  கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றிய பகுதியில், ஊரக உள்ளாட்சி தேர்தல்-2019 இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மேற்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க துவங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இலவச தொலைபேசி எண்-18004255121 மற்றும் இணைப்பு எண்-04142-230124 ஆகிய இரண்டு எண்களில் தொடர்பு கொண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.  


Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்