×

கார்த்திகை தீப சங்காபிஷேகம்

விக்கிரவாண்டி, டிச. 12: விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி கிராமத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ேஹாமத்துடன் முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை கோபூஜையுடன் தொடங்கி 108 மூலிகை பொருட்களுடன் மகா தன்வந்திரி ேஹாமம் நடந்தது. இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடந்து. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. யாகசாலை பூஜைகளை பாபு குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் முனியப்பன், வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஜோதிடர் கமலக்கண்ணன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்தனர். இதில் காங்கிரஸ் ரமேஷ், முண்டியம்பாக்கம் சாந்தி கருணாகரன் ஆகியோர் கார்த்திகை தீபம் ஏற்றினர். பின்னர் சாமி வீதியுலா நடந்தது.

Tags : Karthik Deepa Sangabhishekam ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்