×

காரைக்கால் மாவட்ட மக்களிடம் துணை நிலை ஆளுநர் நாளை காணொளி மூலம் குறைகேட்பு

காரைக்கால், டிச.12: காரைக்கால் கலெக்டர் விக்ராந்த்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டுவருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொளி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. நாளை (13ம் தேதி) இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில், புகார்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து முன்பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Vice-Governor ,Karaikal District ,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...