×

ஏட்டுவை தாக்கிய 2 வாலிபர் கைது

மயிலாடுதுறை, டிச.12: நாகை மாவட்டம் மயிலாடுதுறை காமராஜர் பஸ்ஸ்டாண்டில் உள்ள புறகாவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டு பாலு நேற்று காலை பணியில் இருந்தார். அப்போது ஒரே பைக்கில் 3 பேர் வந்துள்ளனர். அவர்களை ஏட்டு பாலு தடுத்துள்ளார். உடன் பைக்கில் இருந்த ஒருவர் மட்டும் இறங்கிகொண்டு இரண்டு பேர் சென்றனர். அப்போது ஏட்டு பாலு பஸ்ஸ்டாண்டிற்குள் செல்லக்கூடாது என்று தடுத்துள்ளார். உடன் பைக்கில் இருந்த தத்தங்குடி பிரவின்பாபு(24), அசோக்(20) இவருவரும் ஏட்டு பாலுவை தாக்கி தரகுறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஏட்டு பாலு மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசாரை பணிசெய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிவு செய்து பிரவின்பாபு, அசோக் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags : assault ,
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...