×

சீர்காழியில் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது

சீர்காழி, டிச.12: சீர்காழி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது. நாகை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய 9 தேதிமுதல் மனுக்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது சீர்காழி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 3 4 ஆகிய இரண்டு வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு மூன்றாவது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல் ஒன்றியகுழு உறுப்பினர்களுக்கு 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு மூன்றாவது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல் 37 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மூன்றாவது நாளாக மொத்தம் 6 பேர் மட்டும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் கிராம ஊராட்சி வார்டுகள் 309 உள்ளன இந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு இரண்டாவது நாளாக மொத்தம் 129 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனனர்.

மனு தாக்கல் செய்ய காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் மூன்றாவது நாளாக நேற்று நீதிமன்றத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்தலாம் என அறிவிப்பு வெளியானதால் நேற்று மாலை அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டம் அதிக அளவில் வந்தது. இதனால் வேட்புமனுத்தாக்கல் சீர்காழி ஒன்றியத்தில் சூடுபிடித்துள்ளது

Tags : elections ,Sirkazhi ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...