காஞ்சிபுரம், டிச.12: வரும் 14ம் தேதி மாவட்ட நீதிமன்றங்களில், போக்குவரத்துக் கழகங்கள் தொடர்பான மெகா லோக் அதாலத் நடக்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் டைட்டஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அனைத்து சார்பு, தொழிலாளர் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் வரும் 14ம் தேதி, தேசிய மெகா லோக் அதாலத் நடக்க உள்ளது.
இதில் மோட்டார் வாகன விபத்துக்களில் இழப்பீடு, ஆலோசனை, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், பணி, ஓய்வூதிய பலன்கள் குறித்த வழக்குகளுக்கு தீர்வு காணலாம். எனவே போக்குவரத்து கழகங்கள் தொடர்பான வழக்குகள் குறித்து அறிந்து கொள்ள விழுப்புரம் மண்டலம் 9445456009, வேலூர் மண்டலம் 9445456025, கடலூர் மண்டலம் 9445456021, காஞ்சிபுரம் மண்டலம் - 9445456036, திருவண்ணாமலை மண்டலம் - 9445456042 ஆகிய எண்களில்தொடர்பு கொள்ளலாம்.