சென்னை: சாலையில் கிடந்த 10 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவனை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
ெசன்னை குமரன் நகர், கவரை தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (12). அதே பகுதி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை விக்னேஷ் பள்ளிக்கு செல்லும்போது வீட்டின் அருகே உள்ள சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பேப்பர் கவர் ஒன்று கிடந்தது. அதை விக்னேஷ் எடுத்து பார்த்தபோது 10 ஆயிரம் பணம் இருந்தது.