×

ராயப்பன்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

உத்தமபாளையம், டிச.11: ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமைஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார். காமயகவுண்டன்பட்டி சித்தமருத்துவ டாக்டர் சிராஜூதீன் நிலவேம்பு கசாயத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றி விரிவாக விளக்கினார். தொடர்ந்து இங்கு பயிலக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags : Raiappanpatti ,school ,
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது