திருச்சி, டிச. 11: திருச்சி கோட்டை இ.பி ரோடு உப்பிலிய தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் பிரியதர்சினி(19). இவர் 9ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் பிரியதர்சினியை காணவில்லை. இதையடுத்து நேற்று பெற்றோர் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காஸ் நுகர்வோர் கவனத்திற்கு...