×

14ம் தேதி நடக்கும் தேசிய மக்கள் மன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பு

திருச்சி, டிச.11: திருச்சி மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளை சமரசம் செய்த முடித்துக்கொள்ள தேசிய மக்கள் மன்றம் நடைபெற உள்ளது.இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொது மக்கள் வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல், வாங்கல், சம்பந்தப்பட்ட வழக்குகன் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள்(சமாதானமாக போகக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஓர் அரிய வாய்ப்பு அமைய உள்ளது.

தேசிய மக்கள் மன்றத்தின் முன்பாக, வழக்குகளில் சமரசமாக செல்வதால் ஏற்படும் பயன்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. தரப்பினர் நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்றுக்கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. தரப்பினர்களுக்கு வெற்றி தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது. எனவே பொதுமக்கள் வழக்காடிகள் வரும் 14 தேதியன்று நடைபெற உள்ள தேசிய மக்கள் மன்றத்தில் தங்கள் வழக்குகளுக்கு சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக, தினந்தோறும் சமரசப் பேச்சுவார்த்தை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (ஏடிஆர் வளாகம்) அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2460125 என்ற தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை திருச்சி சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி நந்தினி தெரிவித்துள்ளார்.

Tags : National People's Forum ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ