தேனி, டிச. 11: தேனி அருகே கார்த்திகை தீபம் ஏற்ற மலைக்கோயிலுக்கு சென்ற மதுரை வாலிபர் அருவியில் குளிக்கும் போது வழுக்கி விழுந்து பலியானார்.மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் (45). இவர் தேனி அரண்மனைப்புதுாரில் வசிக்கும் தனது தம்பி ரமேஷ் என்பவருடன் பூதிப்புரம் அருகே உள்ள மரக்காமலை பகுதிக்கு சென்றார். அங்கு மலைமேல் உள்ள சன்னாசியப்பன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற இருவரும் சென்றனர்.