பேரையூர், டிச. 11: சேடப்பட்டி அருகே 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகேயுள்ளது அழகுரெட்டிபட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த துரைச்சாமி மகன் ஜெயராமன் (60) இவர் விற்பனைக்காக சட்ட விரோதமாக 50 மதுப்பாட்டில்கள் வைத்திருந்துள்ளார். அந்த வழியாக சேடபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கண்டுபிடித்து ஜெயராமனை கைது செய்து, அவரிடமிருந்த மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.