பேரையூர், டிச. 11: பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் வணிக நிறுவனங்களில் பயன்படுவதாக வந்த தகவலையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் வைரக்கண்ணு தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.அதில் பேரையூர் உசிலம்பட்டி சாலை, பட்டையத்துமுக்கு, மறவர்சாவடி, மார்க்கெட், மற்றும் பஜார்களில் சோதனை செய்யப்பட்டது. அதில் பேரையூர் காளீஸ்வரி நகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கேரிபை, பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மேலும் ஹோட்டல்கள், பலசரக்கு கடை மற்றும் சில்லரை வியாபாரிகள் கடைகளில் சோதனை செய்ததில் கேரிபை, தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4,800 அபராதம் விதிக்கப்பட்டது.