கும்பகோணம், டிச. 11: கும்பகோணம் வண்ணாங்கன்னியில் நடைபாதை சந்தை மறித்து சிமென்டால் கட்டப்பட்ட கட்டைகளை அகற்ற வேண்டுமென நகராட்சி ஆணையரிடம் மக்கள் மனு அளித்தனர்.கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான வண்ணாங்கன்னியில் உள்ள நகராட்சி சந்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இக்குடும்பத்தினர் சென்று வருவதற்கு இந்த சந்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சந்தின் முகப்பில் சிமென்டால் தடுப்பு கட்டைகளை கட்டியுள்ளார். இதுகுறித்து மக்கள் கேட்டதற்கு உரிய பதில் கூறவில்லை.