சேலம், டிச.11:சேலம் மாவட்டத்தில் குடும்ப நலத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில், 20 ஆண்கள் கருத்தடை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் குடும்பநல துறை சார்பில் ‘வாசக்டமி’ என்னும் ஆண்களுக்கான, தழும்பற்ற நவீன கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமில், 20 ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்து கொண்டது கவனம் ஈர்த்துள்ளது. தமிழகத்ைத பொறுத்தவரை பெண்கள் மட்டுமே அதிகளவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இருதயம், நீரிழிவு, ரத்தசோகை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தடை செய்ய முடியாது. அதையும் மீறி கருத்தடை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, தொடர்ந்து கருத்தரிப்பதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் பலருக்கு உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆண்களை கருத்தடை சிகிச்சைக்கு உட்படுத்துவது தான், ‘வாசிக்டமி’ என்னும் இந்த நவீன முறையின் சிறப்பம்சமாகும்.