இடைப்பாடி, டிச.11: இடைப்பாடி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளில் இருந்து பிரிக்கப்பட்ட 855 கிலோ இ-வேஸ்ட் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இடைப்பாடி நகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் தீவிர துப்புரவு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. துப்புரவு ஊழியர்கள் ஒன்றிணைந்து குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த கழிவுகளில் பழைய கம்ப்யூட்டர்கள், ரிமோட்டுகள், செல்போன்கள் உள்ளிட்ட உபயோகமில்லாத எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பிரிக்கப்பட்டு தனியாக சேகரிக்கப்பட்டது. இ-வேஸ்ட் அழிக்கும்போது அதிலிருந்து கதிர்வீச்சு கிளம்பி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமென்பதால், தனியாக சேகரிக்கப்பட்டு வந்தது.