ஆட்டையாம்பட்டி, டிச.11: காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரைத்தையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் காளிப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கந்தசாமி கோயிலில் கார்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமையையொட்டி, கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் கந்தசாமிக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.