காடையாம்பட்டி, டிச.11: காடையாம்பட்டி அருகே கேஸ் கசிந்து வீடு தீப்பற்றி எரிந்ததில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா பொட்டியபுரம் கிராமம் கருத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன்(45). கூலித்தொழிலாளியான இவரது மனைவி மணி(38). இவர்களுக்கு தமிழரசன்(18), சிலம்பரசன்(16) என்ற 2 மகன்கள் உள்ளனர். தமிழரசன் டிப்ளமோ படித்து வருகிறார். சிலம்பரசன் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மணி வீட்டில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சிலிண்டரில் ரெகுலேட்டரில் எரிவாயு கசிந்து தீப்பிடித்துள்ளது. ஆனால், அந்த தீயை அவர்களால் அணைக்க முடியவில்லை. இதனால், அலறி துடித்தனர்.