காடையாம்பட்டி அருகே கேஸ் கசிந்து தொழிலாளி வீட்டில் தீ விபத்து

காடையாம்பட்டி, டிச.11: காடையாம்பட்டி அருகே கேஸ் கசிந்து வீடு தீப்பற்றி எரிந்ததில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது. சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா பொட்டியபுரம் கிராமம் கருத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன்(45). கூலித்தொழிலாளியான இவரது மனைவி மணி(38). இவர்களுக்கு தமிழரசன்(18), சிலம்பரசன்(16) என்ற 2 மகன்கள் உள்ளனர். தமிழரசன் டிப்ளமோ படித்து வருகிறார். சிலம்பரசன் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மணி வீட்டில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சிலிண்டரில் ரெகுலேட்டரில் எரிவாயு கசிந்து தீப்பிடித்துள்ளது. ஆனால், அந்த தீயை அவர்களால் அணைக்க முடியவில்லை. இதனால், அலறி துடித்தனர்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதில், வீட்டிலிருந்த 3 பவுன் நகை, டிவி, துணிமணிகள், சமையல் சாமான்கள், பாத்திரங்கள், கட்டில்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணம் என அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும். இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: