×

திருச்செங்கோட்டில் 2.20 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

திருச்செங்கோடு, டிச.11: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், விவசாயிகள் கொண்டு வந்த 200 மூட்டை பருத்தி, 2.20 லட்சத்துக்கு விற்பனையானது. திருச்செங்கோடு  வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நேற்றைய ஏலத்துக்கு மாணிக்கம்பாளையம், செருக்கலை,  காந்தி  ஆசிரமம், கரிச்சிபாளையம், கந்தம்பாளையம், இறையமங்கலம், வெள்ளியம்பாளையம்,  சங்ககிரி, ஆனங்கூர் ஆகிய ஊர்களில் இருந்து விவசாயிகள் 200 மூட்டை பருத்தியை கொண்டுவந்திருந்தனர். இந்த பருத்தியை கொள்முதல் செய்ய நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவையை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் 4,499 முதல் 5,207 வரை விலை போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 200 மூட்டை பருத்தி 2.20 லட்சத்துக்கு ஏலம் போனதாக, கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்