×

அரசு தாவரவில் பூங்காவில் பாத்திகள் தயார் செய்யும் பணி தீவிரம்

ஊட்டி, டிச. 11: மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது நடவு பணிகளுக்காக பூஙகாவில் உள்ள பாத்திகள் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.  
ஆண்டு தோறும் மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை காண வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகயைான மலர் செடிகள் வைக்கப்பட்டு, அவைகள் அனைத்தும் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படுவது வழக்கம். மலர் கண்காட்சிக்கு 5 மாதங்களே உள்ள நிலையில், நாற்றுகள் நடவு பணிகள் மேற்கொள்ளும் பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளது.இதற்காக இயற்கை உரம் மற்றும் மண் ஆகியவை கலந்து தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகள் துவங்கியுள்ளது. அதேபோல், பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் தற்போது இயற்கை உரம் கலந்த புதிய மண் கொட்டும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மலர்கள் பூக்கும் காலத்தை பொறுத்து நாற்று நடவு பணிகள் துவக்கப்படவுள்ளது. நடவு பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : State Plant Zoo ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு