ஈரோடு, டிச.11: வேலூரை சேர்ந்த அகில பாரத இந்து மகாசபையின் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகன் என்பவர் ஈரோடு எஸ்பி. அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சுவேதா என்ற பெண் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பிட் காயின் மோசடி செய்து தலைமறைவாக உள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்ட ஆடியோ பதிவு ஒன்றில் ரமேஷ், குட்டிமணி, ரவிராஜா, சுபாஷ் சாமிநாதன் ஆகியோர் மீது கடத்தல் மற்றும் மிரட்டல் புகார் கூறி இருந்தார்.ஆனால், சுபாஷ் சாமிநாதன் என்பவர் அகில பாரத மகாசபையின் மாநில தலைவர் என அவராகவே தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டு, கட்சிக்கு களங்கம் விளைவித்து வருகிறார். மேலும், இவர் கட்டப்பஞ்சாயத்து, பண மோசடி, அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்.