×

ஆடுகள் திருடிய வாலிபர் கைது

கயத்தாறு:  கயத்தாறு சுங்கசாவடி அருகேயுள்ள தனியார் கல் உடைக்கும் நிறுவனத்தில் சுமார் 20 ஆடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. சம்பவத்தன்று இதில் இரு ஆடுகள் சாலையோரம் மேய்ந்துகொண்டிருந்தன. அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், இரு ஆடுகளையும் திருடி காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து கல் உடைக்கும் நிறுவனத்தின் மேலாளரான வெள்ளாளங்கோட்டை கிழக்குத் தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து என்பவர் கயத்தாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த  போலீசார், மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் கயத்தாறு போலீசார் வடக்கு இலந்தைகுளம் அருகே ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர், மதுரை விலாங்குடியை சேர்ந்த அஜித்பாண்டியன் என்பதும்,  காரில் வந்து தனது கூட்டாளிகளுன் சேர்ந்து ஆடுகளை திருடிச்சென்றதும் தெரிய வந்தது.  இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஆடுகளை விற்ற பணத்தில் ரூ.15 ஆயிரத்தை கைப்பற்றினர். மேலும் தப்பியோடிய மதுரை விலாங்குடியை சேர்ந்த கார்த்திக்பாண்டியன், சண்முகசுந்தரம் ஆகிய கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு