ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே வேளானந்தல் கிராமத்திலுள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மற்றும் பராமரிப்பு துறை சார்பில் பசு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பசுந்தீவன விதைகள் வழங்கப்பட்டது. உழவர் உற்பத்தியாளர் குழுத்தலைவர் அனந்தநாராயணன் தலைமை வகித்தார். வேளானந்தல் கால்நடை மருத்துவர் முருகு கலந்துகொண்டு பசு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பசுந்தீவன விதைகள் தொகுப்பு பாக்கெட்டுகளை வழங்கினார். இதுகுறித்து கால்நடை மருத்துவர் முருகு கூறுகையில், கால்நடைகளின் பால் உற்பத்தி திறனை பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது அவசியம். கால்நடைகளின் பசுந்தீவன தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கி,