மரக்காணம்: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடற்கரை ஓரம் 50க்கும் மேற்பட்ட இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் ஆந்திரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவர் பகுதியில் கடற்கரை ஓரம் தனியாருக்கு சொந்தமான இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலை உள்ளது. இந்த இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலையில் திருவண்ணாமலை மாவட்டம் திரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மதுரைமுத்து மகன் மதன்(19) என்பவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார்.