பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு

சின்னசேலம்: சின்னசேலம் அருகே ராயப்பனூர் காட்டுகொட்டாய் பகுதியில் வசிப்பவர் தனபால். விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி. விஜயலட்சுமியுடன் அவரது தந்தை ஞானசேகரன் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தார். மேலும் ஞானசேகரன் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதுடன், தற்போது காலை, மாலை இரு வேளையும் இன்சுலின் ஊசி போட்டு வந்தார். அப்படி இருந்தும் கடந்த நவம்பர் மாதம் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் வலி தாங்க முடியாத ஞானசேகரன் கடந்த 8ம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மகள் விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: