×

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள்நாளைக்குள் ஆதாரை இணைக்கவும்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரி யத்தில் பதிவு செய்தவர்கள் நாளைக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். திருவாரூர் மாவட்ட மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆதார் எண் இணைக்கும் பணி திருவாரூர், சமூக பாதுகாப்புத்திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத தொழிலாளர்கள் தங்களின் அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் திருவாரூர், பெரிய மில் தெருவில் அமைந்துள்ள, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாது காப்புத்திட்டம்) அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இணைத்து கொள்ளலாம். மேலும் 04366 - 251210 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும், (www. losssthiruvarur@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியும் தங்களின் நலவாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை நாளைக்குள் 10ம் தேதிக்குள் இணைத்துக் கொண்டு நலவாரிய பணப்பயன்களை பெற்றுப் பயனடைய அழைக்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...