×

டிப்பர் லாரி மாயம்

சாத்தூர், டிச.10: சாத்தூர் அருகே நாருகாபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன்(38). இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை முடித்தலையை சேர்ந்த மரியதாஸ் மகன் இளையராஜா ஓட்டிவந்துள்ளார். கடந்த சில மாதங்களாக லாரி ஓடாததால் இளையராஜா,  திருமுருகனிடம் செலவுக்கு பணம் கேட்டதால் திருமுருகனும் கொடுத்துள்ளார். நேற்று பணம் கேட்டபோது கொடுக்கவில்லை. இதனால் தனது கோழிபண்ணை அருகில் நிறுத்தி வைத்திருந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள லாரியை திருடி சென்றதாக இளையராஜா மீது திருமுருகன் இருக்கன்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் லாரியையும், டிரைவர் இளையராஜாவையும் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி