திருச்சி, டிச.10: திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை தாய்,சேய் பிரிவில் டெல்லி சிறப்பு மருத்துவக்குழு நேற்று ஆய்வு நடத்தினர். திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதில் உள்நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மருத்துவமனை வளாகத்தில் தாய் சேய் தீவிர சிசு வார்டு மற்றும் பிரசவ வார்டு உள்ளது. இங்கும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.