திருச்சி மாநகர பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யும் இடங்கள்

திருச்சி, டிச.10: நீரேற்று நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாநகர பகுதிகளில் இன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்ட நிலையம் ஆகிய பகுதி முழுவதும் மின் விநியோகம் நடைபெறும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்வாரியம் சார்பில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் மின்விநியோகம் இருக்காது.

எனவே மரக்கடை, விறகுபேட்டை, மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை, கன்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்கம் நகர், ஆல்பாநகர், பாத்திமாநகர், கருமண்டபம், காஜாமலை காலனி, ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ்நகர், ஜெயாநகர், பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளில் இன்று (10ம் தேதி) ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது. வழக்கம்போல் நாளை குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்கும்படி திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: