திருச்சி, டிச.10: நீரேற்று நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாநகர பகுதிகளில் இன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்ட நிலையம் ஆகிய பகுதி முழுவதும் மின் விநியோகம் நடைபெறும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்வாரியம் சார்பில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் மின்விநியோகம் இருக்காது.