கார்த்திகை தீபத்திருநாள் மலைக்கோட்டை உச்சியில் இன்று மகாதீபம்

திருச்சி, டிச.10: கார்த்திகை தீப திருநாளையொட்டி மலைக்கோட்டை உச்சியில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று (10ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாலை 6 மணி அளவில் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக அந்த கோபுரத்தில் பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் நீளமுள்ள பருத்தி துணியை திரியாக வைத்து, 900 லிட்டரில் இலுப்பை எண்ெணய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோயில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: