திருக்காட்டுப்பள்ளி, டிச. 10: பூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் பூண்டி அன்னையின் பக்தர்கள் நோயிலிருந்து சுகம் பெறவும், மனபாரத்திலிருந்து விடுதலை பெறவும், குடும்பத்தில் சமாதானம் நிலவவும், பக்தர்களின் தனிப்பட்ட வேண்டுதல் நிறைவேறவும் “பூண்டிமாதா புதுமை இரவு” சிறப்பு வழிபாடு ஒவ்வொரு மாதமும் 8ம் தேதி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலூர் மறைமாவட்டம் அருட்தந்தை நிர்மல்ராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5.15 மணிக்கு அருள்பொழிவு திருப்பலி, சிறப்பு ஜெபமாலை தேர்பவனி, சிறப்பு நற்கருணை ஆராதனை, இரவு ஜெப வழிபாடு நடந்தன.