தஞ்சை, டிச. 10: தஞ்சை பெரிய கோயிலை பார்வையிட்டு கட்டிட கலையை பார்த்து மகாராஷ்டிரா மாநில மாணவர்கள் வியந்தனர். தஞ்சை பெரிய கோயில் யுனஸ்கோ அமைப்பால் அங்கிகரீக்கப்பட்டதாகும். கோபுர விமானம் கலசம் ஒரே கல்லால்லான 80 டன் எடையில் உள்ளது. 216 அடி உயரம் கொண்ட கோபுரத்துக்கு 4 அடி மட்டும் தான் அஸ்திவாரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே கல்லிலான மிகப்பெரிய நந்தி, சிலைகள், சுதை சிற்பங்கள் மற்றும் தங்க இலையால் வரையப்பட்ட ஓவியங்கள், மிகவும் பழங்காலத்து ஓவியங்கள் சிறப்பு வாய்ந்தவை இந்த கோயிலுக்குள் சென்று வந்தாலே மன நிம்மதி, மன நிறைவு ஏற்படும் என்பதால் மாலை நேரங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதேபோல் வெளிநாட்டினர் தினம்தோறும் 1,000க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு கோயிலின் கட்டிட கலைகளை புகைப்படம் எடுத்து கொள்வர். இத்தகைய சிறப்பு பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் உள்ள டிஒஎஸ் பாட்டீல் ஸ்கூல் ஆப் ஆர்கிட்டெக் என்ற பள்ளியில் இருந்து 33 மாணவர்கள், பிரதீபாசவேரி, சுருதி, மயூரோ ஆகியோர் தலைமையில் வந்தனர்.