கும்பகோணம், டிச. 10: கும்பகோணம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணம் அடுத்த ஆலமன்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கவிதா (17). இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் ராஜ். டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் தனது மகள் கவிதா, தம்பி முருகானந்தம் மற்றும் தனது தங்கை ஆகியோருடன் தனது வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.