×

புதுக்கோட்டை நகர பகுதிகளில் வெங்காய மூட்டைகள் பதுக்கலா?

புதுக்கோட்டை, டிச.10: புதுக்கோட்டை நகர பகுதிகளில் சின்னவெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் புதுக்கோட்டை நகரில் உள்ள பெருமாள் கோவில் மார்க்கெட், பெரிய மார்க்கெட், மாலை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வெங்காய மூட்டைகள் உள்ள குடோன்கள் ஆய்வு செய்தனர். அப்போது போலீசார் அரசு நிர்ணயத்த அளவைவிட கூடுதலாக வியாபாரிகள் யாரேனும் வெங்காயங்களை பதுக்கி வைத்து உள்ளனரா?, கூடுதல் விலைக்கு வெங்காயங்களை விற்பனை செய்கின்றனரா? எனவும் ஆய்வு செய்தனர்.

மேலும் அவர்கள் வியாபாரிகளின் கொள்முதல் கணக்குகளையும் சரி பார்த்து ஆய்வு செய்தனர். ஆய்வு மேற்கொண்ட போலீசார் கூறுகையில், அரசின் உத்தரவுப்படி தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள வெங்காயம் மண்டிகள் மற்றும் குடோன்களில் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும். வெங்காயங்களை யாரேனும் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். புதுக்கோட்டை நகர் பகுதியில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் ஆய்வு செய்த சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Pudukkottai ,
× RELATED வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு