×

பொன்னமராவதி கேசராப்பட்டியில் கபடி போட்டி: 46 அணிகள் பங்கேற்பு

பொன்னமராவதி, டிச.10: பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் நடைபெற்ற கபடி போட்டியில் 46 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் கபடி போட்டி நடந்தது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கேசராபட்டியில் பிடாரி அம்மன் கபடி குழு மற்றும் ஊர் பொது மக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டியை நடத்தினர். இந்த போட்டிக்கு மிராஸ் பழனிச்சாமி அம்பலம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 46 அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் முதல் பரிசை திருக்களம்பூர் அணியினரும், இரண்டாம் பரிசை பாரதிநகர் அணியினரும், முன்றாம் பரிசை புதுக்கோட்டை அணியினரும், 4ம் பரிசை கட்டையான்டிபட்டி அணியினரும் வென்றனர். மேலும் 4 அணிக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வராஸ், பழனிச்சாமி, கண்ணன், சண்முகம் மற்றும் பலர் வழங்கினர்.

Tags : Kabaddi Tournament ,teams ,Ponnamaravati Kesarapatti ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை...