×

அரியலூரில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை, பாலாபிஷேகம்

அரியலூர்,டிச.10: அரியலூரில் அகில பாரத ஐயப்ப சேவாசங்கம் மற்றும் குருஜீ யாத்திரை குழு சார்பாக ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைப்பெற்றது. அரியலூரில் பிரசித்திபெற்ற பாலவிநாயகர் கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் குருஜீ யாத்திரை குழு சார்பாக 12ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்ற ஐயப்ப பக்தர்கள் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் ஐயப்பனுக்கு சந்தனம், மஞ்சள், திரவியம், இளநீர் உள்ளிட்ட வற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஐயப்ப பக்தர்கள் சுமந்து வந்த பாலை கொண்டும் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கபட்டது. பின்னர் கோயிலில் கன்னிபூஜை நடைப்பெற்றது. அதன்பின் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Mandala Pooja ,Palaphishekam ,Aiyyappan ,Ariyalur ,
× RELATED சபரிமலையில் நாளை நடைபெறும் மண்டல பூஜை...