×

மகனை சரியாக வளர்க்கவில்லையென கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை

தா.பழூர், டிச. 10: தா.பழூர் அருகே மகனை சரியாக வளர்க்கவில்லையென கணவர் திட்டியதால் தூக்கிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பொய்யாமொழி (46). இவரது மனைவி சித்ரா (40). இவர்களுக்கு தீபிகா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மதுபோதையில் தீபக் சென்று அதே பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி கலைச்செல்வியை (50) தாக்கி அரிவாளால் வெட்டினார். இதுகுறித்த புகாரின்பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிந்து தீபக்கை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் தீபக்கின் தாய் சித்ராவை பார்த்து என்ன குழந்தையை வளர்த்துள்ளாய் என்று பொய்யாமொழி சத்தம் போட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சித்ரா நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தா.பழூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்துக்கு சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை