×

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூர், டிச. 10: அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. செந்துறையில் உள்ள சிவதாண்டேஸ்வரர் கோயிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து காளை வாகனத்தில் சிவதாண்டேஸ்வரர், அம்பாள் பிரகார வீதியுலா நடந்தது. திருஞானசம்பந்தர் அறக்கட்டளை சிவனடியார்கள், செந்துறை, மருவத்தூர், நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், நக்கம்பாடி, இலைக்கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில், பெரியமறை வேதபுரீஸ்வரர் கோயில், காமரசவல்லி கார்கோடேஸ்வரர் கோயில், திருமானூர் கைலாசநாதர் கோயில், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதர் கோயில், குழுமூர் ஜெயபுரீஸ்வரர் கோயில், சென்னிவனம் தீர்க்கபுரீஸ்வரர் கோயில், பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோயில், நாகல்குழி காசிவிசுவநாதர் கோயில், சொக்கநாதபுரம் சொக்கநாதர் கோயில், பழமலைநாதபுரம் பழமலைநாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனீஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர். திருத்துளார் அருளுடைய நாதர்.வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், பாலாம்பிகை உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழாவில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஜெயங்கொண்டம் கழுமாலைநாதர் கோயில்களில் நந்தியம்பெருமானின் பிரகார உலா நடந்தது.

Tags : temples ,Shiva ,Ariyalur district ,
× RELATED க.பரமத்தி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு