×

கைப்பந்து போட்டியில் திருப்பாலைக்குடி அணி முதலிடம்

கீழக்கரை, டிச.10: பெரியபட்டிணத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் திருப்பாலைக்குடி அணி முதல் பரிசையும், கீழக்கரை அணி இரண்டு மற்றும் மூன்றாம் பரிசை பெற்றது. கீழக்கரை அருகே பெரியபட்டிணம் கைப்பந்து சங்கம் நடத்திய முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி பெரியபட்டிணத்தில் நடைபெற்றது. இதில் கீழக்கரை, பரமக்குடி, இளையான்குடி, மானாமதுரை, திருச்சி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, அழகன்குளம், வேதாளை, வாலிநோக்கம் உள்ளிட்ட 50குக்ம் மேற்பட்ட ஊர்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.இதில் திருப்பாலைக்குடி அணியினர் சிறப்பாக விளையாடி முதல் பரிசையும், கீழக்கரை ஜே.வி.சி அணியினர் இரண்டாம் பரிசையும், கீழக்கரை சதாம் சகோதரர் அணி மூன்றாம் பரிசையும் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையை பைரோஸ்கான் மற்றும் அஸ்கர் அலி உள்ளிட்டவர்கள் வழங்கினர். ஆட்ட நாயகனுக்கான கோப்பையை திருப்பாலைக்குடி இர்சாத்தும், தொடர் ஆட்ட நாயகனுக்கான கோப்பையை கீழக்கரை ஜே.வி.சி மஹ்ரூசும் பெற்றனர். ஏற்பாடுகளை பெரியபட்டிணம் கைப்பந்து சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Thiruppalikudi ,team ,tournament ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பாஜக மாஜி...