வன்முறைக்கு எதிராக பெண்கள் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச.10: மதுரை மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு (ஏஐடியூசி) சார்பில் பேச்சியம்மன் படித்துறையில்  பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.   பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட ெபண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தனிச்சட்டம் இயற்றி, நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளை நீதிமன்றம் மூலம் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு (ஏஐடியூசி) சார்பில் பேச்சியம்மன் படித்துறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் காமேஸ்வரி, ஆரோக்கியமேரி கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்.

Related Stories: