கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கேங்மேன் தேர்வில் 200 பேர் பங்கேற்பு

மதுரை, டிச.10:  மதுரையில் நடந்துவரும் மின்வாரிய கேங்மேன் தேர்வில் தினமும் 200 பேருக்கு தேர்வு நடக்கிறது. மின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான தேர்வு திருப்பாலை துணை மின் நிலைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வாரிய பகிர்மான கழகம் சார்பில் நடத்தப்படும் இத்தேர்வில் பங்கேற்க 1767 பேர் விண்ணப்பித்திருந்தனர். அனைவருக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்த இயலாது என்பதால், தினமும் 200 பேர் வரைவழைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. நான்கு கட்டமாக நடத்தப்பட்டு வரும் இத்தேர்வில், நேற்று 200 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா மேற்பார்வையில், ஒரு செயற்பொறியாளர் தலைமையில் 10 உதவி செயற்பொறியாளர்கள், 10 உதவி மின் பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் தேர்வை நடத்தினர்.  உதவி செயற்பொறியாளரும் மக்கள் தொடர்பு அதிகாரியுமான உமா கூறுகையில், ``வரும் 13ம் தேதி மாலை 6 மணி வரை தேர்வு நடக்கிறது. அதன்பின்னர்தான் தேர்வில் பங்கேற்றவர்கள், வராதவர்கள், தேர்வு பெற்றவர்கள் விபரம் தெரியவரும். தேர்வு நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவக்குழுவினர் உள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: