×

கொடைக்கானலில் சிறுமியை சீண்டிய முதியவர் கைது

கொடைக்கானல், டிச. 10: கொடைக்கானலில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டி (57). இவர் தனது மகள் வீட்டில் நடந்த வளைகாப்பு விஷேசத்திற்காக நேற்று கொடைக்கானல் வந்துள்ளார். விஷேசம் முடிந்த நிலையில் பாண்டி உறவினரின் 4 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத அறைக்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதில் பயந்து போன சிறுமி அழுதபடி இருந்துள்ளது. இதுபற்றி பெற்றோர் விசாரிக்கவே நடந்த சம்பவம் பற்றி தெரிந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கொடைக்கானல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து பாண்டியை கைது செய்தார்.



Tags : kidnapping ,Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்