×

ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நான்கு எஸ்ஐக்கள் நியமனம்

ஒட்டன்சத்திரம், டிச. 10: தினகரன் செய்தி எதிரொலியாக ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நான்கு எஸ்ஐக்கள் நியமனம் செய்யப்பட்டனர்.ஒட்டன்சத்திரம் காவல்நிலை கட்டுப்பாட்டில் ஒட்டன்சத்திரம், அரசப்பிள்ளைபட்டி, கே.அத்திக்கோம்பை, கேகையுறம்பு, பலக்கனூத்து, நீலமலைக்கோட்டை, கோடல்வாவி, வடகாடு மற்றும் 88 குக்கிராமங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒட்டன்சத்திரம் நகர் உள்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்காவல் நிலையத்தில் ஒரு ஆய்வாளர், ஒரு சார்பு ஆய்வாளர் உள்பட 15 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். இதனால் நகரில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வந்தது. மேலும் பணிபுரியும் காவலர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்து கொண்டே இருந்தது.இதுகுறித்து கடந்த நவ.28ல் ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்தில் கூடுதல் காவலர்களை நியமிக்க கோரி தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஒட்டன்சத்திரம காவல்நிலையத்திற்கு ஏற்கனவே இருந்த சார்பு ஆய்வாளர் விஜய் உடன் கூடுதலாக சூரியகலா, பெருமாள், கணேசன், வெங்கடாசலம் உள்பட 4 சார்பு ஆய்வாளர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதன்மூலம் இனி குற்றச்சம்பவங்கள் குறைவதுடன் காவலர்களின் பணிச்சுமை குறையும் என பொதுமக்கள் தெரிவித்ததோடு அனைவர் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றியினை தெரிவித்தனர்.

Tags : SIs ,police station ,Ottanasattaram ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்