திண்டுக்கல், டிச. 10: ஒஎச்டி, துப்புரவு தொழிலாளர்களுக்கு 7வது ஊதியக்குழு நிர்ணயம் செய்ய வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் மனு அளித்தனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் ஏராளாமானோர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் ஒ.எச்.டி ஆபரேட்டர், துப்புரவு தொழிலாளர்களுக்கு 7வது ஊதியக்குழு ஊதியக்குழு நிர்ணயிக்காதது, 2 மாத நிலுவை தொகை வழங்காததற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பெற்று தர வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.